நாடாளுமன்றில் பொய்யுரைக்கும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கலாநிதி சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்காக அனுமதிகள் கோரிய போது, அதனை கடற்தொழில் அமைச்சர் மறுத்திருந்தார்.
இது தொடர்பிலான செய்திகள் வெளியாகிய நிலையில் , நாடாளுமன்றில் தான் அவ்வாறு மறுக்கவில்லை என பொய்யுரைத்துள்ளார். இவ்வாறான பொய்யர்கள் அமைச்சராக பதவி வகிக்க முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











