வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டின் முன்னதாக , தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வாவிற்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அங்கிருந்து தந்தை செல்வா கலையரங்குக்கு ஊர்வலமாக சென்று , கலையரங்கில் மூன்று மாவீரர்களின் சகோதரன் ஈகை சுடரேற்றியதை தொடர்ந்து , தந்தை செல்வாவின் உருவ படத்திற்கு தென்கயிலை ஆதீனக் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து ஏனையவரக்ள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். குறித்த மாநாட்டில் பொத்துவில் பொலிகண்டி ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள்,யாழ் குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், ப.அரியநேந்திரன் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் புத்திஜீவிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











