EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில்  காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

ஆடி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு நீதிமன்றில் திகதி குறிப்பது , மொழி பெயர்ப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட மேலதிக உத்தியோகஸ்தர்கள் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்பட்ட நிலையில் வழக்கு ஆகஸ்ட் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதனை அடுத்து லலித் மற்றும் குகன் ஆகியயோரின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

அந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , கோத்தபாய ராஜபக்ச மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டது.

பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என தொடர்ச்சியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைகளின் போது, கோத்தபாய ராஜபக்ச நிகழ்நிலை (online) ஊடாக தோன்றி மன்றில் சாட்சியம் அளிக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனை அடுத்த, கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது

இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்சே நிகழ்நிலை ஊடாக மன்றில் தோன்றி தனது சாட்சியங்களை பதிவு செய்ய மன்று அனுமதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி குறித்த வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கோட்டபாய கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றங்களில் ஏதாவது ஒன்றில் நேரில் தோன்றி நீதவான் முன்னிலையில் நிகழ்நிலை (online) ஊடாக சாட்சியம் அளிக்க மன்று கட்டளையிட்டது.

அதேவேளை எந்த நீதிமன்றில் முன்னிலையாக உள்ளதாகவும் , முன்னிலையாக ஏதுவான மூன்று திகதிகளையும் மன்றுக்கு தெரியப்படுத்துமாறும் , மன்று குறிப்பிடும் திகதியில் நீதிமன்றில் நேரில் முன்னிலையாகி நிகழ்நிலை ஊடாக சாட்சியம் அளிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போது , கொழும்பு நீதிமன்றில் சாட்சியம் அளிக்க திகதியை பெறுவதற்காகவும் , மொழிபெயர்ப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய தேவைகள் உள்ளமையால் வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு

ஆடி 4, 2026
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்
அண்மைய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

ஆடி 4, 2026
மன்னாரில் 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் -வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத்
அண்மைய செய்திகள்

மன்னாரில் 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் -வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத்

ஆடி 4, 2026
கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு

ஆடி 4, 2026
தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை
அண்மைய செய்திகள்

தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை

ஆடி 4, 2026
ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி
அண்மைய செய்திகள்

ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

ஆடி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
கியூபெக் பொதுத்தேர்தலில் அதிரடி மாற்றம் – ‘துவா-ரிவியேர்’ தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் அறிவிப்பு!

கியூபெக் பொதுத்தேர்தலில் அதிரடி மாற்றம் – ‘துவா-ரிவியேர்’ தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் அறிவிப்பு!

22 மணத்தியாலங்கள் முன்னர்
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிக்கும் குடும்பங்கள்

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிக்கும் குடும்பங்கள்

1 நாள் முன்னர்
செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு

செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு

4 நாட்கள் முன்னர்
இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In