பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.











