8 அணிகளுக்கு இடையிலான 10வது மகளிர் ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது .
A’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்,ஹொங்கொங், தாய்லாந்து அணிகளும், ‘B’ பிரிவில் நடப்பு சம்பியன் இலங்கை, பங்களாதேஷ் , இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் Top -2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
7 முறை சம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 30ஆம் திகதி தாய்லாந்துடன் மோதுகிறது.
செப்டம்பர் 3ஆம் திகதி ஹொங்கொங்கையும், 5ஆம் திகதி பாகிஸ்தானையும் சந்திக்கிறது.
அனைத்து ஆட்டங்களும் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது .











