இந்தியா தனது 600 ஆவது டெஸ்ட் போட்டியை ஒகஸ்ட் 15-ம் திகதி இலங்கைக்கு எதிராக காலி மைதானத்தில் விளையாடவுள்ளது.
இந்தப் போட்டி இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தன்று நடைபெறுவதால், இந்திய அணியின் கேப்டன் கில்லுக்கு இது தனிச்சிறப்பு வாய்ந்த தருணமாக அமைந்துள்ளது.
1932-இல் தொடங்கிய இந்தியாவின் டெஸ்ட் பயணம், தற்போது 600 ஆவது போட்டியை எட்டியுள்ளது.
இது தொடர்பாக கில் கூறியதாவது,
இந்தியாவின் 600 ஆவது டெஸ்ட் போட்டியில் என் நாட்டை வழிநடத்துவது மிகப்பெரிய கவுரவம். அதுவும் சுதந்திர தினத்தன்று இந்தப் பொறுப்பை ஏற்றிருப்பது இன்னும் பெரிய பெருமை. என கேப்டன் தெரிவித்துள்ளார்.











