EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

ஆவணி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வட மாகாணத்திற்குச் சேவையாற்றும் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் ஒன்றான வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் நிலவும் தீவிர மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார துறைசார்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், இதற்கு உடனடியாக நிலையான தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இம்மருத்துவமனை ஒரேயொரு மயக்கவியல் நிபுணருடன் (Consultant Anaesthetist) மட்டுமே இயங்கி வருவதாகச் சுகாதார துறைசார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஒரேயொரு நிபுணத்துவ மருத்துவரே அவசர மற்றும் விபத்து சிகிச்சை அறுவை கூடங்கள், பல துறைகளின் வழக்கமான அறுவைக்கூடங்கள், எலும்பியல் அறுவை கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) சேவைகள், முதன்மை PCI (Primary PCI) உள்ளிட்ட இதய கதீட்டராக்கம் (Cardiac Catheterisation) மற்றும் பிற சிகிச்சை முறைகளுக்கான மயக்கவியல் ஆதரவு ஆகிய அனைத்தையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

இதன் விளைவாக வழக்கமான அறுவை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார துறைசார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் (palliative procedures) மற்றும் அவசர காயங்களுக்கான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

காது-மூக்கு-தொண்டை (ENT), வாய் மற்றும் முகச்சீரமைப்பு (OMF), மகப்பேறு மற்றும் பெண்நோயியல் (Gynaecological), எலும்பியல் (Orthopaedic) மற்றும் சிறுநீரக மண்டல சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

அவசர நிலைகளில் நோயாளர்கள் யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் போதனா மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதேவேளை, மருத்துவமனையில் ஒரேயொரு அறுவை சிகிச்சை நிபுணரே (Consultant Surgeon) விபத்து சேவை, அவசர மற்றும் வழக்கமான அறுவை கூடங்கள், வார்ட் பராமரிப்பு மற்றும் அழைப்புப் பணி (On-call) ஆகிய பொறுப்புகளை கவனித்து வருவதால், அறுவை சிகிச்சை பராமரிப்புகளில் கடும் தாமதம் நிலவுகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டும் தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையை நம்பியிருக்கும் மக்களின் நலன் கருதி, நிலவும் மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறைக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடம் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

ஆவணி 18, 2026
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
அண்மைய செய்திகள்

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆவணி 18, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

ஆவணி 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

ஆவணி 18, 2026
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்
அண்மைய செய்திகள்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

ஆவணி 18, 2026
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு
அண்மைய செய்திகள்

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

4 நாட்கள் முன்னர்
நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

4 நாட்கள் முன்னர்
துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

2 நாட்கள் முன்னர்
க்ளீன் ஐலண்ட்  திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

4 நாட்கள் முன்னர்
யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In