EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

ஆவணி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கையில், முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களின் மீது வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளை எழுதி, அடுத்தடுத்த அதிகாரிகளுக்குக் கோப்புகளைக் கைமாற்றி விடும் பழக்கத்துக்கு, உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் பெறப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கையாண்ட விதத்தைச் சுட்டிக்காட்டியே, சட்டத்தரணி திலீப பீரிஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் கிடைக்கும் போது, அதிகாரிகள் வெறும் குறிப்புக்களை மட்டும் எழுதிவிட்டுத் தப்பித்துக்கொள்ளாமல், அத்தகவல்கள் மீது நேரடிப் பொறுப்பேற்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டதாக, சட்டத்தரணி திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, நடைபெற்ற தாக்குதல் குறித்து அன்றைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) தலைவர் வழங்கிய மிக முக்கியமான உளவுத்துறைத் தகவலை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரிவு உள்ளிட்ட நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பி வைத்தமையை, சட்டத்தரணி திலீப பீரிஸ் நினைவுகூர்ந்தார்.

இருப்பினும், நாட்டின் பாதுகாப்பிற்குத் தீவிர அச்சுறுத்தல் நிலவிய அத்தகைய சூழலில், அந்த உளவுத்துறை ஆவணத்தின் மீது வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளின் சுருக்கக் குறிப்பை மட்டுமே எழுதி அவர் அனுப்பி வைத்ததாகக் சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சட்டத்தரணி திலீப பீரிஸ், ஒரு நாட்டின் பொலிஸ் தலைவராக இருந்து கொண்டு இத்தகைய ஆபத்தான அச்சுறுத்தலைக் கையாள இந்த அணுகுமுறை போதுமானதா என கேள்வியெழுப்பினார்.

முன்னெச்சரிக்கை தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற போதிலும், பேரழிவைத் தடுக்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்காகத் தலைமைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகள் தங்களுக்குரிய சட்டப்பூர்வ மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகி, வெறுமனே ”தேவையான நடவடிக்கைக்காக” என்ற வார்த்தைகளின் சுருக்கக் குறிப்பை எழுதி கோப்புகளை, அடுத்த அதிகாரிகளிடம் தள்ளிவிடுவது பாதுகாப்பை உறுதி செய்யாது என்பதையும், திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

ஆவணி 14, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 14, 2026
முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா
அண்மைய செய்திகள்

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

ஆவணி 14, 2026
மயிலிட்டியில்  17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

ஆவணி 14, 2026
மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

ஆவணி 14, 2026
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முற்பட்ட 297 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முற்பட்ட 297 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

6 நாட்கள் முன்னர்
இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

1 மணத்தியாலம் முன்னர்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

5 மணத்தியாலங்கள் முன்னர்
வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

2 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In