EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

ஆவணி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவதுநாளான இன்றைய தினம் புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடைபெற்றன.

செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு , அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய அகழ்வு பணியில் அட்சரக்கூடு , செப்புக்காசு , மோதிரம், தாயத்து என்பன அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சான்று பொருட்களின் ஆய்வுகளை மேற்கொண்டு, தொல்லியல் ஆய்வாளரின் அறிக்கையும், குழி ஒன்றில் மீட்கப்பட்ட 09 என்புக்கூடுகளின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதைகுழி தவிர்ந்த ஏனைய 14 இடங்களில் அகழப்பட்ட சோதனைக்குழிகளில் , 05 சோதனைக்குழிகளுக்குள் , 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் , சட்ட வைத்திய அதிகாரியினால் , 14 நாட்களுக்கான பாதீடு மன்றில் சம்பிக்கப்பட்டு , அனுமதி கோரப்படவுள்ளது.

அதற்கான அனுமதியினை மன்று வழங்கும் பட்சத்தில் , பாதீட்டினை நீதி அமைச்சுக்கு அனுப்பி , அதனூடாக நிதி வழங்கபட்டால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை , ஏற்கனேவே அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புகூடுகள் மீதான ஆய்வினை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலைமையில், அது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

ஆவணி 19, 2026
ஞானப்பிரகாசம் கிசோரின் வழக்கை தள்ளுபடி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்
இலங்கை

ஞானப்பிரகாசம் கிசோரின் வழக்கை தள்ளுபடி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்

ஆவணி 19, 2026
கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆவணி 19, 2026
பரந்தன் பகுதியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது
இலங்கை

பரந்தன் பகுதியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது

ஆவணி 19, 2026
நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆவணி 19, 2026
யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

ஆவணி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

5 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

1 நாள் முன்னர்
இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

11 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா வேப்பங்குளத்தில் முற்றாக தீக்கிரையான வீடு

வவுனியா வேப்பங்குளத்தில் முற்றாக தீக்கிரையான வீடு

12 மணத்தியாலங்கள் முன்னர்
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In