EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
நாக்பூரில் ரூ.25 கோடி போலி தங்க நகை கடன் மோசடி: குற்றவாளி கைது

நாக்பூரில் ரூ.25 கோடி போலி தங்க நகை கடன் மோசடி: குற்றவாளி கைது

ஆவணி 30, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியின் 9 வெவ்வேறு கிளைகளில் போலி தங்க நகைகளை அசல் எனக் கூறி அடகு வைத்து ரூ.25 கோடி வரை சுருட்டிய பிரம்மாண்ட வங்கி மோசடி வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சச்சின் ராவத் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஐந்து மாதங்களாக காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பெரும் சதித்திட்டத்தில் தொடர்புடைய கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்கியின் மனிஷ் நகர் கிளையில் நடைபெற்ற வழக்கமான தணிக்கையின் போது, சில குறிப்பிட்ட கடன் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளின் தரம் மற்றும் எடை குறித்து தணிக்கையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான மறுஆய்வில், சுமார் 152 தங்கக் கடன் கணக்குகளின் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

ஆரம்பத்தில் நேர்மையான வாடிக்கையாளராக நடித்து வங்கியின் நம்பிக்கையைப் பெற்ற சச்சின் ராவத், பின்னர் தனது பழைய இரும்பு வியாபாரத்தில் பணிபுரிந்த ஏழைத் தொழிலாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டமிட்ட மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இந்த மோசடி வலைப்பின்னலுக்கு வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் தலா ரூ.5,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு 155 போலி மதிப்பீட்டுச் சான்றிதழ்களை வழங்கியதுடன், வங்கி மேலாளர்கள் மற்றும் தணிக்கையாளர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சொகுசு வாகனங்கள், கணினிகள் மற்றும் போலி கடன் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முறைகேடாகச் சுருட்டப்பட்ட முழுப் பணத்தையும் மீட்பதற்கும், இதில் தொடர்புடைய பிற போலி வாடிக்கையாளர்களைக் கண்டறிவதற்கும் அடுத்தகட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பூர்-கரூர் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் நீர் திறப்பு
உலகம்

திருப்பூர்-கரூர் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் நீர் திறப்பு

ஆவணி 30, 2026
இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் இடையே மோதல்
உலகம்

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் இடையே மோதல்

ஆவணி 30, 2026
காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
உலகம்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

ஆவணி 30, 2026
வெனிசுலா கச்சா எண்ணெய் அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்கும் – டொனால்ட் டிரம்ப்
உலகம்

வெனிசுலா கச்சா எண்ணெய் அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்கும் – டொனால்ட் டிரம்ப்

ஆவணி 30, 2026
நேபாள பனிப்பாறை சரிவு பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 675-ஆக உயர்வு
உலகம்

நேபாள பனிப்பாறை சரிவு பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 675-ஆக உயர்வு

ஆவணி 30, 2026
நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
உலகம்

நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஆவணி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

7 நாட்கள் முன்னர்
போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

6 நாட்கள் முன்னர்
மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

7 நாட்கள் முன்னர்
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In