EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

புரட்டாதி 1, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (01) திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத் தொடங்கி வைத்தார்.

மாநிலத்தின் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க மேட்டூர் அணையை, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் திறந்து வைப்பது இதுவே முதல் முறையாகும்.

அணை வளாகத்தில் விவசாயிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் பச்சை நிறத் துண்டை அணிந்திருந்த அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சேலம் பயணித்த விஜய், சாலை வழியாக மேட்டூரை அடைந்தார்.

நீர்த்தேக்கப் பகுதிக்குச் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்து அவர் தனது பயணத்தை மேற்கொண்டார்.

சாலை ஓரங்களில் கட்சிக் கொடிக் கம்பங்களை நட்டும், முக்கியச் சந்திப்புகள் மற்றும் சாலை நெடுகிலும் வரவேற்புப் பதாகைகள் மற்றும் தோரணங்களை அமைத்தும், டிவிகே (TVK) கட்சியினர் முதலமைச்சருக்கு எழுச்சியான வரவேற்பளித்தனர்.

பல இடங்களில் மக்கள் அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்றனர்.

45 நாள் கால இடைவெளியில் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரானது சுமார் 12 மாவட்டங்களைச் சென்றடைகிறது.

இதில், தமிழகத்தின் ‘நெற்களஞ்சியம்’ என்று கருதப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் முதன்மைப் பயனாளிகளாக உள்ளனர்.

செப்டம்பர் 1-ஆம் திகதி நிலவரப்படி, 120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 91.56 அடி நீர் இருப்பு உள்ளது.

அணையின் வான் கதவுகளை திறப்பதற்கு வழக்கமாக ஜூன் 12 ஆம் கடைபிடிக்கப்பட்டாலும், போதிய பருவமழை இல்லாமை மற்றும் குறைந்த நீர் இருப்பு காரணமாக இம்முறை அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி ஆற்று நீர் பகிர்வு தொடர்பாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் சர்ச்சைக்கு மத்தியில் இந்த நீர் திறப்பு நடைபெறுகிறது.

கர்நாடகா விடுவிக்க வேண்டிய நிலுவை நீரை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் இவ்வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

புரட்டாதி 1, 2026
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை
அண்மைய செய்திகள்

தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை

புரட்டாதி 1, 2026
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்
அண்மைய செய்திகள்

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

புரட்டாதி 1, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

புரட்டாதி 1, 2026
இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்
அண்மைய செய்திகள்

இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

புரட்டாதி 1, 2026
தமிழக காவல் துறையில் 15 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்
உலகம்

தமிழக காவல் துறையில் 15 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்

புரட்டாதி 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

6 நாட்கள் முன்னர்
22வது திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கைகோர்க்கும் GMOA

22வது திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கைகோர்க்கும் GMOA

2 நாட்கள் முன்னர்
ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

3 மணத்தியாலங்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

1 நாள் முன்னர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In