வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் 1995ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், தமக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு தனியார் விருந்தினர் விடுதியில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமக்குக் கல்வி புகட்டிய குருமார்களை ஒன்றுதிரட்டி, அவர்களின் தியாகமிக்க சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நோக்கிலேயே குறித்த நிகழ்வானது ஒருங்கிணைக்கப்பட்டது.
இதன்போது தமக்குப் புகட்டிய கல்வியே இன்றைய சமூக உயர் நிலைக்குக் காரணம் என்பதை நினைவு கூர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலையணிவித்து சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











