EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியாபொது வேட்பாளர் விடயம் இன்றும்  முடியவில்லை!

வவுனியாபொது வேட்பாளர் விடயம் இன்றும் முடியவில்லை!

ஆனி 16, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பொது வேட்பாளர் நிறுத்தும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் இன்றும் முடிவுகள் எடுக்கப்படவில்லை.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம். தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்று தெரியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன்பின்னர் தீர்மானிப்பதாகவே முடிவெடுத்திருந்தோம்.

அத்துடன் தங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ள இருவர் தமிழரசுக்கட்சியின் தலைமைகாரியாலத்திற்கு வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இது ஒரு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை. நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறானவர்களுடன் பேசுவோம். ரணில் விக்கிரமசிங்க தன்னை வேட்பாளராக அறிவித்தால் அவரோடும் பேசுவோம்.

முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் இதுவரை அதிகாரபகிர்வு தொடர்பாக பொதுவெளியில் சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டிருந்த வேட்பாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு 13 ஆம் திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவோம் என்று சொல்லத்தலைப்பட்டுள்ளனர்.

அது முழுமையான தீர்வுஅல்ல அதனை நாம் ஏற்கவில்லை ஆனால் அரசியலமைப்பில் உள்ளதையாவது அமுல்படுத்த வேண்டும் என்பதை நாம் சொல்லியிருக்கின்றோம். எனவே அந்த பேச்சுவார்த்தைகள் ஆராக்கியமாக இருந்தது. அவர்கள் சொன்னதை செய்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கின்றது.

மும்முனைப்போட்டி ஒன்று ஏற்ப்படுமாக இருந்தால் தமிழ் பேசுகின்ற மக்களின் வாக்குப்பலம் பிரதானமாக இருக்கும். இதனை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. மிகவும் கவனமாக எமது பேரம்பேசுதலை நடத்தவேண்டும். சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்த வேண்டும் என்ற கருத்தோடு நாங்கள் இருக்கின்றோம்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த மத்தியகுழு கூட்டத்திலேயே பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனவே இன்று அதைப்பற்றி பேசவில்லை. மக்களது கருத்துக்களையும் அறிந்து தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதற்கான சுயாதீனம் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவாஜிலிங்கம் வழமையாகவே நிற்ப்பவர். பழக்கதோசத்தில் அவர் நிற்கலாம் அதில் எனக்கு பிரச்சனையில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

மண்டைதீவு  படுகொலையின்  36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு
அண்மைய செய்திகள்

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

ஆவணி 26, 2026
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

ஆவணி 26, 2026
யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

ஆவணி 26, 2026
யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

ஆவணி 26, 2026
போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்
அண்மைய செய்திகள்

போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

ஆவணி 26, 2026
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

3 மணத்தியாலங்கள் முன்னர்
நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In