முடி உதிர்வதட்கு பல காரணங்கள் உண்டுஉடலில் போதுமான இரும்பு சத்து இல்லாவிட்டாலும் தலை முடி அதிகமாக வேரோடு உதிர்ந்து கொட்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறி, வேறு தண்ணீரை தலைக்கு குளிக்க பயன்படுத்துகிறீர்கள் என்றாலும், முடி வேரோடு கொட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.முடி உதிர்வில் இருந்து பாதுகாப்பு பெற, முதலில் ஹெல்தியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்பு சத்து நிறைந்துள்ள கீரை வகைகள், நட்ஸ், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும். சில நாட்களில் இவை நிகழ்ந்து விடாது. இரண்டு மாதம் தொடர்ந்து இரும்பு சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு பாருங்கள், நல்ல ரிசல்ட் கிடைக்கும். அடுத்து தலைமுடிக்கு ரத்த ஓட்டத்தை கொடுத்து, தலைமுடி உதிர்வுக்கு கற்றாழை, தயிர், சின்ன வெங்காயம், தேங்காய் எண்ணெய், வாழைப்பழம் ஆகிய பொருட்கள் தேவை. தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தக் கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான சத்துக்களும், பயன்களும் உண்டு. கற்றாழை: உச்சந்தலையின் pH அளவை சமன் செய்து, மயிர்க்கால்களைத் தூண்டி, முடிக்கு பளபளப்பைக் கொடுக்கும். தயிர்: புரதச்சத்து நிறைந்தது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். பொடுகைக் குறைத்து, முடியை மென்மையாக்கும். சின்ன வெங்காயம்: சல்ஃபர் சத்து முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியம். முடி உதிர்வதைக் குறைத்து, புதிய முடி வளர உதவும். தேங்காய் எண்ணெய்: முடியின் ஆழம் வரை ஊடுருவி, ஊட்டமளிக்கும். முடி உடைவதைத் தடுத்து, மென்மையாக்கும். வாழைப்பழம்: பொட்டாசியம், வைட்டமின்கள், சிலிக்கா நிறைந்திருப்பதால், முடி உடைவதைத் தடுத்து, அடர்த்தியை அதிகரிக்க உதவும்.






