நாட்டில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போதைய எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கத்தை விமர்சித்து கொண்டே வருகின்றது.
இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஆட்சி பீடம் ஏறுவார் என கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் ராஜபக்ஷங்களை மக்கள் கொண்டு வருவார்கள்.
அதேபோல எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச மிக மென்மையானவராக உள்ளார். ஒரு வலுவான எதிர்க்கட்சி தலைவர் இங்கு இல்லை. எனவே மீண்டும் ராஜபக்ஷக்களின் ஆட்சியையே மக்கள் கொண்டு வர போகின்றனர் என கூறியுள்ளார்.











