கொழும்பு 13, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் தரம் 12 வரையிலான மாணவர்களுக்காக திண்மக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, தற்போது கனடாவில் வசித்து வரும் இப்பாடசாலையின் பழைய மாணவியான திருமதி காஞ்சனா அனந்தநாதன் அவர்களால் பாடசாலைக்கு ரூ.125,000 பெறுமதியான குப்பைத்தொட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இதன்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கொட்டாஞ்சேனை கிழக்கு பிரதேச உறுப்பினருமான காயத்ரி விக்ரமசிங்க அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு மாநகர சபை மாவட்டம் 01 இன் மாவட்ட பொறியியலாளர் ஜெகத், திண்மக்கழிவு பொறியியலாளர் பத்திரண, தொழில்நுட்ப அதிகாரி மற்றும் அவரது குழுவினர், Care Clean நிறுவனத்தின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட மாவட்ட திண்மக்கழிவு மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
மேலும், பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கிரேஸ், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான கழிவு முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











