EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் –  அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால

வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தியுள்ளோம் – அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால

ஆனி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் எடுத்தோம். இதனால், வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரான கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சட்டவாட்சியை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்து வருகின்றனர். வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற இந்த பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது.

தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் . ஆனால் நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம்.

எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதையும் , பொலிஸார் பாரபட்சம் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பணித்துள்ளோம்.

கட்சி,ஜாதி, இனம், மதம் என்ற எந்த வேறுபாடுகள் இன்றி, அனைவரும் ஒரே இனம் என்ற சூழலை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படமாட்டாது

இந்த பிரதேசத்தில் வாழும் உங்கள் பிள்ளைகள், உங்களின் எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டில் சந்தோசமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அவ்வாறான சூழல் உருவாக வேண்டும்.

பிரிவினை வாதம் வேறுபாடுகள் தலைதூக்க அனுமதிக்க கூடாது.. அவ்வாறான நிலை எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட கூடாது. எமது பிரதான நோக்கம் எதிர்கால சந்ததியின் ஒற்றுமையான வாழ்வே.

அதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கா விடின், உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். அல்லது பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்.தமக்கான நீதியினை பெற்றுக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு

பொலிஸாருக்கு கிடைக்கும் உயரிய விருதே , மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்படும் விருதே. எனவே மக்களின் நன்மதிப்பை பொலிஸார் பெற வேண்டும். அவ்வாறு நன்மதிப்பை பெற்றுக்கொள்வதே பொலிஸாருக்கு கிடைக்கும் உயரிய விருதாகும்.

வடக்கில் மொழி பிரச்சனை இன்றி சேவைகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று வடக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் , வடக்கில் சிறப்பான சேவையை மேலும் மேம்படுத்தவும் , வடக்கில் உள்ள இளையோரும் பொலிஸ் சேவைகளில் தாமாக முன்வந்து இணைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் –  நா.உ.க.இளங்குமரன்
அண்மைய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்

ஆனி 14, 2026
யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள்
அண்மைய செய்திகள்

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள்

ஆனி 14, 2026
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ஆனி 13, 2026
நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆனி 13, 2026
யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை
அண்மைய செய்திகள்

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை

ஆனி 13, 2026
ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில்
அண்மைய செய்திகள்

ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில்

ஆனி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை

1 நாள் முன்னர்
அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

6 நாட்கள் முன்னர்
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் 29 வயதுடைய பெண் வியாபாரி கைது

6 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற  “சுயமரியாதை நடை”

யாழில் இடம்பெற்ற “சுயமரியாதை நடை”

7 நாட்கள் முன்னர்
யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள்

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள்

32 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In