EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆனி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை மல்லாவி நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய், மல்லாவி விவசாயிகளால் இணைந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் மல்லாவி மத்திய பேரூந்து வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நெற்களை உலரவிடுவதற்கான சரியான நெல் தளங்கள் இல்லை எனவும், சில பகுதிகளில் நெல் உலர்த்திகள் காணப்படுவதாகவும் அவர்கள் 5000/6000 கிலோ வரை நெற்களை உலர்த்த கூடியவாறே இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் நெல் உலர்த்திகள் எமது பகுதிகளில் இல்லை எனவும் தாங்கள் தார் வீதிகளில் நெற்களை காயப்போடும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை அறுவடை செய்கின்ற நெல்லினை பச்சையாக கொள்வளவு செய்வோர் 75 கிலோ எடையில் 5500 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல்லை 8000 ரூபாவுக்கும், சிவப்பு நெல்லினை 4500 ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதாகவும் தெரிவித்தனர்.

குறித்த பகுதிகளில் நெல் உலர்த்திகளையும், களஞ்சியப்படுத்த கூடிய வசதிகளையும் ஏற்படுத்தி தந்தால் நல்லது என்றும் தெரிவித்தனர்

இந்த அரசாங்கம் உடனடியாக நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க முன்வரவேண்டும் என்றும், முகநூல்களில் விவசாயிகளுக்கு உதவுகின்றோம் என்று பதிவை போட்டு விட்டு இருக்காமல் அதனை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்த விவசாயிகள் , விவசாயிகளை இந்த அரசு கவனத்தில் எடுக்காவிடின், விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில் முறைக்குள் தான் போக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை நெல் கொள்வனவாளர்களும் தரகர்களும் எழுந்தமானமாக விலையைத் தீரமானிக்கின்றமை. (பெரும்பாலும் எமது பகுதிகளில் பசளை மருந்து விற்பனையாளர்களே தரகர்களாக இருக்கின்றமையால் மறைமுகமாக விவசாயிகள் நெல்லை அவர்களுக்கே விற்பனை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றமை.)

மரக்கறிகளின் விலை மிகக்குறைவான விலையில் விவசாயிகளிடம் கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை.

தத்தி போன்ற நோய்களிற்கு விவசாய ஆராய்ச்சி மூலம் நிரந்தர தீர்வு வழஙகப்படாமை. விவசாய கடன்கள் தேவையான விவசாயிகளுக்கு இலகுவாக சென்றடையாமை போன்ற விடையங்கள் உள்ளடக்கி வடமாகாண ஆளுநருக்கான மகஜர் ஒன்றும் விவசாயிகளினால் கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ஆனி 13, 2026
யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை
அண்மைய செய்திகள்

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை

ஆனி 13, 2026
ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில்
அண்மைய செய்திகள்

ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில்

ஆனி 13, 2026
யாழில். கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
அண்மைய செய்திகள்

யாழில். கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

ஆனி 13, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆனி 13, 2026
சுருக்குவலையுடன்  கைப்பற்றப்பட்ட பிரதேச சபை உறுப்பினரது பட்டா ரக வாகனம்
அண்மைய செய்திகள்

சுருக்குவலையுடன் கைப்பற்றப்பட்ட பிரதேச சபை உறுப்பினரது பட்டா ரக வாகனம்

ஆனி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழ்.பல்கலையில் இடம்பெறவுள்ள  பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

யாழ்.பல்கலையில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

3 நாட்கள் முன்னர்
பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை சொல்வது குற்றமில்லை – சட்டத்தரணி வி.மணிவண்ணன்

பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை சொல்வது குற்றமில்லை – சட்டத்தரணி வி.மணிவண்ணன்

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி போராட்டம்!!

வவுனியாவில் சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி போராட்டம்!!

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!

5 நாட்கள் முன்னர்
சுன்னாகத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

சுன்னாகத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In