நாட்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பதட்காக புதிய சட்ட நடவடிக்கை மேட் கொள்ளப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
இதன்படி வீதிகளில் நடக்கும் பாதசாரிகள் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து சென்றால் இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,323 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 1,389 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு விபத்து மற்றும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.











