EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை  நீக்கு

யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு

ஆடி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழில் 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானியை உடனடியாக நீக்க வேண்டுமென சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ தெரிவித்தார்.

யாழ் மயிலிட்டியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாக இடம் பெற்று வரும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணிகள் மக்களுக்கு என கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டுகிறது.

2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்ட வலி வடக்கு மக்களின் சுமார் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்துச் செய்யப்படவில்லை.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மற்றும் பலாலி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் பாதிக்கமட்ட மக்களின் குரல்களுக்கு தற்போதைய அரசாங்கமும் செவி சாய்க்காமல் கடந்த கால அரசாங்கங்களைப் போல அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு இயங்கும் அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய வளமான காணிகளை கையகப்படுத்தி 35 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்கள் தமது காணிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்புத் தேவையென காணியை சுவீகரித்துவிட்டு மக்களின் காணிகளில் விவசாயம் செய்த இராணுவம், மரக்கறிகளை விற்று வருமானம் ஈட்டுகிறார்கள் இது நாட்டின் திறைசேரிக்கா செல்கிறது.

ஆகவே மக்களின் காணிகள் மக்களுக்கு எனக் கூறிவரும் அரசாங்கம் விரைவாக மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதோடு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கருக்கான வர்த்தமானியையும் உடனடியாக நீக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆடி 17, 2026
வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆடி 17, 2026
கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா
அண்மைய செய்திகள்

கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா

ஆடி 17, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

ஆடி 17, 2026
வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு
அண்மைய செய்திகள்

வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

ஆடி 17, 2026
மன்னாரில் இடம்பெற்ற  ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

ஆடி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

2 நாட்கள் முன்னர்
ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

2 நாட்கள் முன்னர்
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

2 நாட்கள் முன்னர்
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37வது நினைவு தின நிகழ்வு

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37வது நினைவு தின நிகழ்வு

4 நாட்கள் முன்னர்
யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை  தாக்கிய விளக்கமறியல் கைதி

யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை தாக்கிய விளக்கமறியல் கைதி

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In