கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்றையதினம் (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் டித்வா புயலின் போது சேதமடைந்திருந்த வீதிகளை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் சுமார் 48 குடும்பங்களை சேர்ந்த 200 ற்க்கும் மேட்பட்டோர் வாழ்ந்து வரும் சூழலில், பாதை சீரில்லாது காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் கொத்மலை பிரதேச செயலகம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்திருந்த நிலையில், இன்னும் அது தொடர்பில் எவ்வித அறிவித்தலும் இல்லை.
இந்த தோட்டத்திற்கு செல்லும் சுமார் 1 கிலோமீற்றர் நீளமுடைய பிரதான பாதையை புனரமைத்து தருமாறு மக்கள் போராட்டத்தில் தெரிவித்துள்ளனர்.











