யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான காக்கை தீவுப் பகுதியில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் தரம் பிரிக்கப்படாது அல்லது மீழ் சுழற்சிக்கு உட்படுத்தப்படாது தீ வைத்து கொளுத்தப்படுவதால் அருகில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் தரம் பிரிக்கப்பட்டு மீழ் சுழற்சிமுறை அல்லது உரமாக்கல் திட்டமோ எதுவும் மேற்கொள்ளப்படாமல் கொட்டப்பட்ட கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன.
இதனால் அயலில் உள்ள கிராம மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுதாகவும், b நோய்வாய்ப்பட்டு வருவதாகவும், பிரதேச மக்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.











