மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், சிறிய மற்றும் ஒருநாள் கடற்றொழில் படகுகள் குறித்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் இடைக்கிடையே மணிக்கு 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.











