நல்லூர் பிரதேச செயலகமும் நல்லூர் கலாசார பேரவையும் இணைந்து, பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த “பண்பாட்டு – 2026” விழா நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மேலதிக செயலர் பா. ஜெயகரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் தர்சினி நிதர்ஷன் கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கி. மாலினி மற்றும் பிரபல வர்த்தகப் பிரமுகர் ஈ.எஸ்.பி. நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் மரபுக் கலைகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்காலத் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கலைத்துறையில் சிறப்பாகப் பங்களிப்பு செய்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.











