அயகம இந்தொலவத்தை கலே விகாரைக்கு அருகில் பள்ளத்தில் வீழ்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் ஆறு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் பணிப்புரையின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவின் மேற்பார்வையின் கீழ்,சம்பந்தப்பட்ட நபரின் சடலத்தைப் மீட்கும் பணியில் இராணுவ படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











