EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு

த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு

ஆவணி 18, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், த.வெ.க. அரசு பொறுப்பேற்றபோது புதிய யுகம் பிறப்பதாகக் கூறப்பட்ட போதிலும், கடந்த 100 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 546 குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாகக் சாடியுள்ளார்.

குறிப்பாக, போதைப்பொருள் புழக்கம் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், கோவையில் போதைப்பொருள் விற்பனை குறித்துக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் அளித்த கல்லூரி மாணவன் அமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தகவல் கொடுத்த மாணவனின் விபரத்தைக் காவல்துறையே போதை கும்பலிடம் கசியவிட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டைக் சுமத்தினார்.

மேலும், திருவொற்றியூரில் இரு அமைச்சர்கள் விரட்டியடிக்கப்பட்டது, தண்டையார்பேட்டை மற்றும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள், வேலூரில் பெண் காவலர் தாக்கப்பட்ட நிகழ்வு ஆகியவற்றை வரிசைப்படுத்தி, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சந்திசிரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையும் முதலமைச்சரும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய பரந்தாமன், தற்போதைய அரசைக் காட்டிலும் எதிர்க்கட்சியான திமுக மீதே மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.

இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய த.வெ.க. அரசை ‘சர்க்கஸ் சர்க்கார்’ எனக் கடுமையாக விமர்சித்த அவர், முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலகம்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

ஆவணி 18, 2026
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்
உலகம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்

ஆவணி 18, 2026
மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து
உலகம்

மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து

ஆவணி 18, 2026
இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து
உலகம்

இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து

ஆவணி 18, 2026
காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை
உலகம்

காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை

ஆவணி 18, 2026
அமெரிக்காவின் பவல் ஏரி வறட்சி: குடிநீர் மற்றும் நீர்மின்சார விநியோகத்தில் சிக்கல்
உலகம்

அமெரிக்காவின் பவல் ஏரி வறட்சி: குடிநீர் மற்றும் நீர்மின்சார விநியோகத்தில் சிக்கல்

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

3 நாட்கள் முன்னர்
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

10 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In