EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

புரட்டாதி 6, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே சுண்டா ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள ஆபத்தான அனக் கிரகடாவ் எரிமலை பேரிரைச்சலுடன் வெடித்துச் சிதறியது.

வெள்ளிக்கிழமை முதல் லேசான அதிர்வுகளை வெளிப்படுத்தி வந்த இந்த எரிமலை, அதிகாலை நேரத்தில் பயங்கரமாக வெடித்து, வானில் சுமார் 20,000 அடி முதல் 50,000 அடி வரை அடர்ந்த சாம்பல் மேகங்களை உமிழ்ந்தது.

இந்த நச்சுப் புகை மற்றும் சாம்பல் மேகங்கள் நாட்டின் தலைநகர் ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கி வேகமாகப் பரவி வருகின்றன.

விமான எஞ்சின்களுக்குள் எரிமலைச் சாம்பல் புகுந்தால் கடுமையான ஆபத்து ஏற்படும் என்பதால், தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள முக்கிய சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உட்பட ஆறு முக்கிய விமான நிலையங்களின் சேவைகள் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதனால் சிங்கப்பூர், மலேசியா, சிட்னி, தோஹா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய 58 சர்வதேசச் சேவைகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 22,000-க்கும் அதிகமான பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

குடியிருப்புப் பகுதிகள் எரிமலையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் உடனடி உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்றாலும், ஆபத்து கருதி எரிமலையைச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காற்றில் பரவும் சாம்பல் புகையால் கண் எரிச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வெளியே செல்லும் மக்கள் பாதுகாப்பு முகக்கவசங்களை அணியுமாறு இந்தோனேசியப் பேரிடர் மேலாண்மை முகமை அறிவுறுத்தியுள்ளது.

1883-ல் உலகையே உலுக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கிரகடாவ் எரிமலையின் சுவட்டில் உருவான இந்த அனக் கிரகடாவ், கடந்த 2018-ஆம் ஆண்டிலும் வெடித்து பெரிய சுனாமியை ஏற்படுத்தி 430-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்
உலகம்

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்

புரட்டாதி 6, 2026
டெல்லியில் தங்கும் விடுதியின் கட்டிடம் இடிந்து விபத்து
உலகம்

டெல்லியில் தங்கும் விடுதியின் கட்டிடம் இடிந்து விபத்து

புரட்டாதி 6, 2026
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி
உலகம்

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி

புரட்டாதி 6, 2026
ஸ்பெக்ட்ரம் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது ஜெர்மனியின் ஐசர் ஏரோஸ்பேஸ்!
உலகம்

ஸ்பெக்ட்ரம் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது ஜெர்மனியின் ஐசர் ஏரோஸ்பேஸ்!

புரட்டாதி 6, 2026
சிட்னியில் எல் நினோ வெப்ப அலை: காட்டுத்தீ அபாயத்தால் தீ மூட்ட  தடை
உலகம்

சிட்னியில் எல் நினோ வெப்ப அலை: காட்டுத்தீ அபாயத்தால் தீ மூட்ட தடை

புரட்டாதி 6, 2026
பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
உலகம்

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

புரட்டாதி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

6 நாட்கள் முன்னர்
உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த  நினைவுத் தூபி

உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி

4 நாட்கள் முன்னர்
கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

26 minutes முன்னர்
ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

5 நாட்கள் முன்னர்
பலாலியில்  12ஆவது  வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்

பலாலியில் 12ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

3 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In