பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஒரு மதக் குழுவினரின் வருகையின்போது, பெண் ஊழியர்களை பணியில் இருந்து விலக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஈபிள் கோபுரத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பிரான்ஸில் மதச்சார்பின்மை, பாலின சமத்துவம் மற்றும் பொது இடங்களில் மத விதிமுறைகள் தொடர்பான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.











