தரமான உயர்கல்விக்காகவும், இலங்கையின் அரச பல்கலைக்கழக கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள கடுமையான சவால்களுக்கு தீர்வுகோரியும் வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா பணியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர் இணைந்து ஒரு நாள் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் பல்கலைக்கழக நுழைவாயிலின் முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையின் கல்விக்கான வை அழிக்காதே, கல்விசார் பணியாளர்களின் பற்றாக்குறைக்கு உடன் தீர்வு காணுங்கள், கல்விக்கான நிதியினை அதிகரிக்கவும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்கவும் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.











