வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 3 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந. திருலிங்கநாதன் தலைமையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த வீடுகல் J/392 கிராம சேவகர் பிரிவிலுள்ள திருமதி. சிவாஜி நந்தினி, J/395 கிராம சேவகர் பிரிவிலுள்ள pஆறுமுகம் மனோகரன்,
J/417 கிராம சேவகர் பிரிவிலுள்ள ராசா சசிகுமார் ஆகிய பயனாளிகளுக்கே வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த வீடுகளை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, கடற்றொழில், நீரியல் துறை அமைச்சர் இ.சந்திரசேகர், ஆகியோர் பயனாளிகளிடம் உத்தியோகா பூர்வமாக கையளித்தனர்.
இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளீன் ஸ்ரீலங்கா” செயற் திட்டத்தின் மாகாண இணைப்பாளர் எஸ். கபிலன், பஉதவி பிரதேச செயலாளர் தயானந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.











