செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது. அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரியே பேரணி நடைபெற்றது.
நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள , ஐ.நா காரியாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமான பேரணி , கிட்டு பூங்கா பகுதியில் நிறைவடைந்து , கூட்டமும் நடைபெற்றது











