EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

புரட்டாதி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வட்டாரபிரதேச சபை உறுப்பினர் ச.சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,

இலங்கையில இருக்கிற நீதிபதிகளுடைய வயதை கூட்டுகிறார்கள். 62 வயதோடு இருக்கிற நீதிபதியை 67 வயது வரைக்கும் கொண்டு வருகிறார்கள்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் – இரண்டு நீதிமன்றங்களுக்கும் வருகின்ற நீதிபதிகளின் வயதை 62 வயதிலிருந்து 67 வயது வரைக்கும் கொண்டு வர தீர்மானித்திருக்கிறார்கள்.

இதற்கு பல எதிர்ப்புகள், பல இராஜதந்திரிகள் மத்தியிலும் இருக்கிறது. அதைவிட வழக்கறிஞர்கள் சங்கம் (Bar Association) என்று சொல்வது, வழக்கறிஞர்கள் சங்கமும் அதை கடுமையாக எதிர்க்கிறது.

எதிர்க்க எதிர்க்க பாராளுமன்றத்திலே அது விவாதத்திற்கு வருகிறது. வருகின்ற 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பாராளுமன்றத்தில் அது விவாதத்திற்காக வருகிறது.

விவாதத்திற்கு வருகின்ற பொழுது, நாங்கள் அதனை எதிர்த்து வாக்களிப்பதாக தீர்மானித்திருக்கிறோம். அந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை.

அப்படி என்றால், இலங்கையில் இருக்கிற அனைத்து ஊழியர்களுக்கும் 65 வயதாக ஆக்குங்கள், பிரச்சினையில்லை. ஆனால் அரசாங்கம் யாரை மட்டும் கொண்டு வர முயற்சிக்கிறது என்றால் நீதிபதிகளை. தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து, தங்களுக்கு ஏற்ற தீர்ப்புகளை வழங்க முயற்சிக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்படப் போவது நாங்கள்தான். உங்களுக்குத் தெரியும், நாங்கள் எதிர்க்கட்சிதான். நாங்கள் இந்த நாட்டில் ஆளுங்கட்சி இல்லை.

ஆனால், பிரதேச சபையில் ஆளுங்கட்சி யார்? நீங்கள்தான், நாங்கள்தான். நீங்கள்தான் நாங்கள்தான்.

அப்ப நாங்கள் பிரதேச சபையில் வருமானத்தை வைத்துக்கொண்டு, ஆளுங்கட்சியாக இதனை நாங்கள் செய்துதான் ஆக வேண்டும். இதிலிருந்து நாங்கள் விலகிப் போக முடியாது. இதனை நாங்கள் செய்கிறோம்.

ஆனால் மக்கள் சில நேரங்களில் தேர்தல் வரைக்கும் என்ன செய்கிறார்கள்? சில பேரை மாற்றித் தேர்வு செய்கிறார்கள். அல்லது மக்கள் ஏதோ ஒரு கோபத்தில் ஆராயாமல் பார்த்த உடனே தேர்வு செய்து விடுகிறார்கள்.

இன்றைக்கு அப்படி தேர்வு செய்யப்பட்டவரின் நிலைமை? போய் எங்களை யார் அழித்தானோ, எங்களை யார் இன அழிப்பு செய்தானோ, எங்கள் வீடுகளிலெல்லாம் இன்றைக்கும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்றால், எங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என்று யார் காணாமல் ஆக்கினானோ, அவனோடு மேடையில் ஏறி நின்று ஒருத்தன் பேசுகிறான் நேற்று! நீங்கள் வாக்கு போட்ட ஒருத்தன்தான்!

அவனை ‘தந்தை’ என்றான், அவன்தான் ‘நாட்டின் ஜனாதிபதி’ என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று அவனுக்கே தெரியாது! அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே அவனுக்கே ஒன்றும் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

புரட்டாதி 14, 2026
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற  சிறை அதிகாரி கைது
அண்மைய செய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

புரட்டாதி 14, 2026
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்
அண்மைய செய்திகள்

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

புரட்டாதி 14, 2026
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
அண்மைய செய்திகள்

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புரட்டாதி 14, 2026
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

புரட்டாதி 14, 2026
படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்
அண்மைய செய்திகள்

படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்

புரட்டாதி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

3 நாட்கள் முன்னர்
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

7 மணத்தியாலங்கள் முன்னர்
வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
மன்னாரிற்கு  விஜயம் செய்த அமைச்சர்  பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

மன்னாரிற்கு விஜயம் செய்த அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In