யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு பகுதியில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் வீட்டுக்குள் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவர் அங்கு சென்று பார்த்தபோது, வயோதிப பெண் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணின் பேரன் எனக் கூறப்படும் நபர் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும், கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











