ரயில்வே துறையின் கூட்டு தொழிற்சங்கங்கள் எதிர்வரும் செப்டம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
ரயில்வே ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ரயில்வே சேவையின் செயல்திறனிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன. நாட்டில் உள்ள 98 ரயில் இயந்திரங்களில் சுமார் 50 இயந்திரங்களே தற்போது சேவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரயில் சேவைகளை முறையாக முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











