நாட்டில் சிறந்த ஊடக கலாசாரத்தை உருவாக்க ஊடகவியலாளர்களின் பணி மற்றும் அவர்களின் தரமான பங்களிப்பை மதிப்பிடும் வகையில் ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படும் என ஊடக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வு தொடர்பில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் பிரதானிகளுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆறு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அது நடத்தப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களின் கீழ் ஒரு நல்ல மனிதநேய ஊடக கலாச்சாரம் தொடங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இடைநிறுத்தப்பட்ட ஜனாதிபதி ஊடக விருதுகள் விழா இம்முறை நடைமுறைப்படுத்தப்படும்.
ஊடக விருது விழாவுக்கான செலவுகளுக்காக 2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விருது பெற்றவர்கள் 60 பேருக்கு பரிசுத் தொகை வழங்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.











