உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மரபு மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை கூறுகின்றன இதற்கான தீர்வுதான் எண்ணெய் குளியல்
உடலில் நல்லெண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை சரியாகும் அதேபோல் இது
செரிமானத்தையும் சரி செய்கிறது.
இனப்பெருக்க உறுப்புகளின் அதீத சூட்டை தணித்து ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.
தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் குளியல் இந்த பிரச்சினைகளை சரி செய்கிறது.
கவலை, மன உளைச்சல், துக்கம், பயம், கோபம்,
தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி போன்ற உணர்வுகள் உடலில் பித்த அமில நிலையை அதிகரிக்கிறது இதனை எண்ணைக்குளியல் சரி செய்கின்றது
எண்ணெய் உடலின் சூட்டை சமநிலைக்கு கொண்டு வருவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணர்ச்சிகள், கொதிப்பு நிலை குறைகிறது.
உமிழ் நீர், எச்சில், நிணநீர், கணைய நீர் (இன்சுலின்), சளி, கோழை, சிறுநீர், மாத விடாய், வெள்ளைப்படுதல், வியர்வை ஆகியவற்றை சரியான அளவில் வைத்து உடலை பராமரிக்கிறது.












