வவுனியா பண்டாரிகுளம் பிரதான வீதி புனரமைப்பு பணிகள் இன்று (26) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாத குறித்த வீதி கடந்த ஆட்சி காலத்தில் புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இடம்பெற்று இருந்த போதிலும் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதி காப்ர்பட் ரீதியாக புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் குறித்த வீதி சொப்பனிடப்படாமை தொடர்பில் பொது மக்கள் விமர்சனம் தெரிவித்து வந்த நிலையிலேயே இன்றைய தினம் இப்ப பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1.9 கிலோ மீட்டர் நீளத்தை கொண்ட குறித்த வீதி 30. 3 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.