மட்டக்களப்பு வேலையில்லா பட்டாதாரிகளின் பிரச்சனை தொடர்பாக பாராளுமன்றத்தில் கதைத்து அதற்கான தீர்வினை பெற்று தருவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா நேற்று புதன்கிழமை (3) மாலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் நேற்று புதன்கிழமை 2 வது நாளாக வேலை கோரி ஆர்பாட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்ட இடத்திற்கு மாலை 6 மணிக்கு சென்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது வேலையில்லா பட்டதாரிகள் மேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாணகாணத்தில் நியமனங்கள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் கல்வியை கற்று பட்டங்களை பெற்றபோதும் இதுவரை அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்கவில்லை எனவும்.
இதனால் வாழ்வாதரம் மற்றும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் படித்து பட்டம் பெற்ற எங்களுக்கு வேலை வாய்பை வழங்க வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கதைப்பதாகவும் முடிந்தளவு தீர்வை பெற்றுதர முயற்சிப்பதாகவும் தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றதையடுத்து ஆர்பாட்டகாரார்களும் அங்கிருந்து விலகிச் சென்றனர்.











