EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
Mannar மன்னார்- 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம். !

Mannar மன்னார்- 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம். !

ஆவணி 30, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் நகர பகுதியில் ஏற்கனவே ஒரு மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்,மன்னார் பிரதேசச் செயலகம் எவ்வித அனுமதியும் வழங்காத நிலையில் தற்போது கொழும்பில் அனுமதி பெற்று இன்னும் சில தினங்களில் குறித்த மது விற்பனை நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக நாங்கள் அண்மையில் மன்னர் மது வரி திணைக்களத்திற்கு சென்று குறித்த விடயம் தொடர்பாக கேட்ட போது அவர்களும் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு ஆதரவாகவும் தம்மோடு கடும் தொனியில் கதைத்த தாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அதனைச் சுற்றி மக்களின் குடியிறுப்புகள் அமைந்துள்ளது.

,காமன்ஸ்,இளைஞர் படையணி முகாம்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உற்பட மக்களின் செயல்பாடுகள் அதிகரித்த இடமாக குறித்த பகுதி காணப்படுகிறது.

குறித்த மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டால் அப்பகுதியில் பல்வேறு கலாச்சார சீர் கேடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் உடனடியாக குறித்த மது விற்பனை நிலையத்தை அங்கிருந்து அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து மது விற்பனை நிலையம் அகற்றப்படாது விட்டால் மாவட்டம் தழுவிய ரீதியில் ஒரு சில தினங்களில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபருக்கு கையளிக்கும் வகையில் மாவட்டச் செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பருத்தித்துறை கடற்கரையில் பரபரப்பு
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை கடற்கரையில் பரபரப்பு

மார்கழி 7, 2025
சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மார்கழி 6, 2025
தெஹிவளையில் சற்று முன்  துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
அண்மைய செய்திகள்

தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

மார்கழி 6, 2025
வெலிமடை மண்சரிவு – இரு உடல்கள் மீட்பு!
அண்மைய செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 611ஆக உயர்வு!

மார்கழி 6, 2025
கிறிஸ்து பிறப்பு விழா குறித்து யாழ் மறை மாவட்ட குரு முதல்வரின் அறிவிப்பு!
இலங்கை

கிறிஸ்து பிறப்பு விழா குறித்து யாழ் மறை மாவட்ட குரு முதல்வரின் அறிவிப்பு!

மார்கழி 6, 2025
யாழில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் இல்லை – ம.பிரதீபன்
இலங்கை

யாழில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் இல்லை – ம.பிரதீபன்

மார்கழி 6, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கோமா நிலைக்கு சென்ற யாழ் சிறைச்சாலை கைதி

கோமா நிலைக்கு சென்ற யாழ் சிறைச்சாலை கைதி

2 நாட்கள் முன்னர்
மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்
சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

20 மணத்தியாலங்கள் முன்னர்
மறுமலர்ச்சிக்கான பாதை – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள்

மறுமலர்ச்சிக்கான பாதை – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள்

3 நாட்கள் முன்னர்
விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியிலிருந்த அனைவரும் மீட்பு!

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியிலிருந்த அனைவரும் மீட்பு!

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In