பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கலமொன்று இன்று காலை உயிரிழந்துள்ளதாக பாணந்துறை போலீஸ் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 ஆயிரம் கிலோ நிறையுடைய இந்த திமிங்கலம் கரையொதுங்கிய சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளதாக போலீஸ் உயிர்காப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த திமிங்கலத்தின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் உயிர்காப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்க்கொண்டு வருகின்றனர்.











