55வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் யுவதிகளிற்கான சுயதொழில் பயிற்சி இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பயிற்சியானது இன்று காலை 9 மணியளவில் தனியார் விருந்தக மண்டபத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம விருத்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்துகொண்டதுடன், கண்டாவளை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பயிற்சிநெறியில் கலந்துகொள்பவர்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றது. விருந்தினர்கள் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டது.
தொடர்ந்து பயிற்சிகள் செயல்முறை அடிப்படையில் வழங்கப்பட்டதுடன், அதற்கான விளக்கமும் வழங்கப்பட்டது. குறித்த பயிற்சியில் அழகுக்கலை, திருமண அலங்காரம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.
180க்கு மேற்பட்ட யுவதிகள் பயிற்சியில் பங்கு கொண்டு பயன்பெற்றதுடன், அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது





