யாழ் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில் அவர் தற்ப்போது எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். மதுபான நிலையம், வீதிப் போக்குவரத்து, அரச உத்தியோகத்தர்கள் ஆற்ற வேண்டிய பணி போன்றவை வரவேற்கிறோம்.
இதே போல் எமது கடல் வளத்தைப் பாதுகாப்பதற்கு நீரியல்வளத்துறைச் சட்டங்களை உடன் நடமுறைப்படுத்த அனுரா கையில் எடுக்க வேண்டும்.
கடலையும் மீனவர்களையும் பாதுகாப்பதற்கூடாக அந்நியச் செலவாணியை ஈட்ட முடியும்.
அடுத்து வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் பழையவர்கள் விலகி புதியவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும். படித்த இளைஞர்,யுவதிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும்.











