EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
ஜனாதிபதி அனுராவின் திட்டத்தை முறியடிக்க 10 பிரதிநிதிகளை பெற மக்கள் ஆணைவழங்க வேண்டும் – பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

ஜனாதிபதி அனுராவின் திட்டத்தை முறியடிக்க 10 பிரதிநிதிகளை பெற மக்கள் ஆணைவழங்க வேண்டும் – பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

கார்த்திகை 1, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற போவதாக அறிப்பு சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்க கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம் எனவே இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை எமது கட்சி 10 பேரை நாடாளுமன்றதிற்கு அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் முன்னாள் நா.உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு அரசடி தேய்வநாயகம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (31) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்

இந்த தேர்தல் விசேடமாக தமிழ் மக்களுடைய தலைவிதியை மாற்றி அமைக்க கூடிய ஒரு தேர்தலாக சமகால அரசியல் ஆக்கிவிட்டது என்ற கருத்து மேலோங்கியுள்ளது ஆனால் ஒரு தேர்தல் எம்முடைய தலைவிதியை முற்றுமுழுதாக மாற்றி அமைக்க கூடியளவிற்கு முக்கியத்துவம் பெறுவது என்பது மிகவும் குறைவு அப்படிப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது

இன்று ஜனாதிபதியாக இருக்கும் ஜே.வி.பி கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரான அனுரகுமார திஸநாயக்கா தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை நிறுவுவதன் ஊடாகவும் 2015 மைத்திரி; ரணில் நல்லாட்சி காலத்திலே புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முன்னெடுக்கப்பட்டு 2017; செட்டெம்பர் 19 ஒரு இடைக்கால அறிகையை வெளியிட்டது அந்த அறிக்கையை தேர்தலுக்கு பின்னர் அதனை நிறைவேற்றி தீர்வு வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே அந்த இடைக்கால அறிக்கையில் இருப்பது என்ன? அந்த அறிக்கையின் விடையங்களை சரியாக பார்க்க வேண்டும் அந்த அறிகை தயாரித்தபோது வடகிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று அந்த அறிக்;கைக்கு நாடாளுமன்றத்தில் ஏக மனதாக ஆதரவு வழங்கினார்.

அந்த நம்பிக்கையில் தான் அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச மட்டத்திற்கு ஒரு செய்தியை அனுப்பக் கூடிய வகையிலே அந்த இடைக்கால அறிக்கையை தான் நிறைவேற்றப் போவதாக துணிந்து அறிவித்துள்ளார்.

அந்த இடைக்கால அறிக்கையில் இன்றைக்கு இருக்கும் ஒற்றையாட்சியை விட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி முறைமையை கொண்ட பண்பாக அமைந்துள்ளதுடன் அதன் முன்னுரையில் மைத்திரியின் பேச்சின் சாரம்சமே முன்னுரையக அமைக்கப் பட்டுள்ளது.

இந்த ஒற்றையாட்சி முறைமையை உலகத்துக்கு முதலில் அறிமுகப்படுத்தியது பிரித்தானியா அங்கும் இன்றுவரையும் ஒற்றையாட்சி; நடைமுறையில் இருக்கின்றது அங்கு இருக்கின்ற ஒற்றையாட்சி அங்கு இருக்க கூடிய நான்கு இனங்களுக்கு தேச அங்கீகாரத்தை வழங்குகின்றது மட்டுமல்ல அதையும் தாண்டி ஸ்கொட்லாந் பிரிந்து போவதற்கு கூட அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆகவே மைத்திரிபால சிறிசேன இலங்கைக்குரிய ஒற்றையாட்சி அப்படிப்பட்ட பண்புகளை கொண்டதாக இருக்க முடியாது எனவே இலங்கைக்கு என ஒரு ஒற்றையாட்சி முறைமையை தேடிப்பிடிக்கவேண்டும் என்றார்.

ஒரு முற்போக்குவாத சிந்தனையிலே உலகத்திலே ஏனைய நாடுகளில் இருக்க கூடிய ஒற்றையாட்சி முறைமைகளை மாற்றி அமைத்து பல இனங்கள் தேசங்கள் கொண்ட நாடுகளிலே அங்கு இருக்க கூடிய தேசங்களுக்கு ஒரு அங்கத்துவத்தை சமத்துவத்தை வழங்கி ஒற்றையாட்சியை அமத்தி வாசித்து அந்தந்த நாடுகளில் இருக்க கூடிய வேறுபாடுகளை கொண்டாடி அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் போக்கு இலங்கைக்கு பொருந்தாது என இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது

ஒரு நாட்டின் ஒற்றையாட்சியா? சமஸ்டி ஆட்சி என தீர்மானிப்பது ஒரு நாட்டினுடைய இறைமை அந்த இறைமை எந்தவகையில் அமைந்துள்ளது என்பதை வைத்துதான் ஒற்றையாட்சியா சமஸ்டி ஆட்சியா என்றவற்றை வைத்துதான் நீதிமன்றங்கள் தீர்மானிக்கும்.

இலங்கைக்கு 13 திருத்தமாக கொண்டுவரப்பட்ட மாகாணசபையை நிறைவேற்ற ஆராய்ந்தபோது இலங்கையில் இருப்பது ஒற்றையாட்சி எனவே இந்த மாகாண சபை முறைமை கூட இந்த ஒற்றையாட்சிக்குள் இருப்பதாகவும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கையில் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது மாறாக ஜனாதிபதி நியமிக்கம் ஆளுநரின் கையில்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கும் அதனால் இலங்கையின் மாகாணசபை முறைமை ஒரு ஒற்றையாட்சி முறைமையை மீறவில்லை என பிரகடனப்படுத்தியுள்ளனர்

அந்த தீர்ப்பு 1987 வழங்கியதன் பின்னர் அதை ஆமோதிப்பதற்கு 32 வருடத்துக்கு மேலாக உச்ச நீதிமன்றம் வழங்கி இன்று இருக்கின்ற ஓற்றையாட்சியை மிக வலிமையாக உறுதிபடுத்திக் கூட அது போதாது என்று இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றுவதற்கு அன்றை அரசாங்கம் முயற்சி எடுத்தது

எனவே எங்களுக்கு இருக்கும் சவால் இந்த ஆட்சியல் இருக்கம் அனுரா தலைமையிலான ஜேவிபி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் தாங்கள் ஆட்சியை பிடிப்பதாக அவர்கள் 30 வருடமாக அரசியல் செய்து கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டனர் அதில் 3 தொடக்கம் 5 வீதமான வாக்கை பெற்ற இவர்கள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வேலை செய்து கட்டமைப்பு ரீதியாக தெற்கிலே ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு 4 பேருக்கு மேல் பிரதிநிதியை எடுக்கமுடியாத சூழைலை வைத்துக் கொண்டு அதிசயமாக ஜனாதிபதி தேர்தலில் 43 வீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக சந்தர்ப்பம் கிடைத்தது

இந்த 43 வீதம் அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டே இவர்களுடைய செயற்பாட்டையும் திட்டங்களையும் முற்று முழுதாக உள்வாங்கி கொண்டு வாக்களிக்கவில்லை என் அவர்களுக்கு நன்றாக தெரியும் மற்றவர்கள் இந்த நாட்டை கொள்ளையடித்து மாறி மாறி இந்த நாட்டை வங்குரோத்து நிலமைக்கு கொண்டு போயுள்ள கோபத்திலே மற்றதரப்புக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்திருந்த சூழ்நிலையில் தான் அவர்களுக்கு வாக்களிக்காமல் இன்னொரு தரப்பான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கலாம் என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி தேர்தலில் இந்த 43 வீத வாக்கு பெற்றனர்.

ஒரு அதிசயமாக கிடைத்த அந்த 43 வீத வாக்கை தங்களுடன் இருப்பை உறதிப்படுத்த வேண்டும் அந்த வாக்குகள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? மற்றவர்களை போல தெற்கில் இருக்கம் மக்களை ஏமாற்ற கூடாது என்பதுடன் தேர்தலுக்கு முன்பாக வைக்கும் கருத்தை தேர்தலுக்கு பின்னால் அதனை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் அந்த வாக்களித்த மக்களை கவர்ந்து நம்பிக்கையை தங்கள் மீது எற்படுத்தி அவர்களை நிரந்தரமாக தங்களுடைய ஒரு வாக்கு வங்கியாக மாற்றி அமைக்கலாம்
அந்த சூழலிலேதான் ஜனாதிபதி அனுரா மிகவும் மோசமான பிற்போக்குவாதமாக உருவாக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற போவதாக அறிவித்துள்ளார் அவருக்கு நன்றாக தெரியும் வட கிழக்கில் தமக்கு செல்வாக்கு கிடையாது என ஆனால் அந்த இடைக்கால அறிக்கை கொண்டுவரும் பொழுது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அதை ஆதரிப்பார்கள் என அது தான் அவர்களுக்கு முக்கியமான தேவை

2015 வடகிழக்கில் தெரிவு செய்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர் என்றால் எதிர்வரும் தேர்தலிலே வரும் பிரதிநிதிகள் குறைந்தது 10 பேராவது ஆதரிப்பார்கள் என அவர்களது எதிர்பார்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் துணிந்து தமிழ் மக்களது இனப்பிரச்சனைக்கான தீர்வு இந்த இடைக்கால அறிக்கையின் நிறைவின் ஊடாக அமையும் என தெரிவித்தார்

எனவே அனுராவுக்கு நம்பிக்கையான தரப்பு யார்? அன்று அந்த 18 பேரும் யார்? அதில் 16 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்கள் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் போது சமஸ்டிக்கான தீர்வை பெற ஆனையை வழங்குமாறு கேட்டனர் அதனை மக்கள் நம்பி அமோக வெற்றியை கொடுத்தார்கள் அதில் மட்டக்களப்பு மண் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. அவர்கள் வென்று நாடாளுமன்றம் சென்ற அடுத்த நிமிடம் இந்த ஒற்றையாடசிக்கு இனங்கினார்கள்.

இவர்கள் தற்போது பிரிந்து கேட்டாலும் நாடாளுமன்றத்திற்கு 10 பேர் சென்று அறுதி பெரும்பான்மை காண்பீப்பார்கள் என அனுராவின் நம்பிக்கை எனவே சரித்திரத்தில் முல்தடவையாக தமிழரே ஒற்றையாட்சியை விரும்பி ஏற்றுக் கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கான ஒரு முயற்சியாக 14 ம் திகதி தேர்தல் அமையக் கூடும் அந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க கூடிய ஒரே ஒரு தரப்பு எம்முடைய மக்கள் அதனால்தான் நாங்கள் இந்த தேர்தல் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்க கூடிய தேர்தலாக இருக்கின்றது என்ற எச்சரிக்கை விட்டுக் கொண்டுவருகின்றாம்.

தமிழினம் ஒரு இனவாத இனமல்ல சிங்களவருக்கு பௌத்தத்திற்கோ நாங்கள் எதிரிகள் அல்ல எங்களுக்கு இருப்பு பாரம்பெரியம் இருப்பதை மற்றவர்கள் மதிக்கவேண்டும் அதேவேளை எங்களுடைய அடையாளங்களை அங்கீகரித்து கொண்டாடவேண்டும் நீங்கள் வேறுபாடுகள் அற்ற கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் அதை செய்யாமல் பெரும்பான்மையாக இருக்கின்ற நீங்கள் எங்களின் இருப்பை அழிக்கின்ற வகையில்; செய்வதை ஜனநாயகம் என்ற ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாது எனவே தான் ஒற்றையாட்சி முறைமை ஒரு நாளும் ஒரு பாதுகாப்பை கொடுக்காது என இலங்கையில் எற்படுத்திய 3 அரசியல் அமைப்புக்களை தொடர்சியாக நிராகரத்து வந்துள்ளோம்.

ஆதனால் தான் சர்வதேசம் கூறுகின்றது போர் முடிந்து 15 வருடத்தின் பின்னரும் மாமறிவந்த ஒவ்வொரு அரசாங்கமும் இங்கு ஒரு பயங்கரவாத பிரச்சனை மட்டும்தான் என சொல்லியும் சர்வதேசம் இல்லை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் அமைப்பை ஆதரவோடு எப்போது நிறைவேற்றுகின்றீர்களோ அன்றுதான் இந்த இனப்பிரச்சனை தீர்க்;கப்பட்டதாக கருதுவோம் என்றனர் எனவே இந்த அனுராவின் இந்த சதி திட்டத்தை முறியடிக்கும் ஒரே ஒரு தரப்பு நாங்கள்தான் எனவே 10 பேரை பிரதிநிதிகளாக அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!
இலங்கை

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
இலங்கை

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

மார்கழி 11, 2025
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு!

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு!

1 நாள் முன்னர்
அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

4 நாட்கள் முன்னர்
புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இரு மாணவர்களின் சடலம் மீட்பு!

யாழில் பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

1 நாள் முன்னர்
தெஹிவளையில் சற்று முன்  துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

5 நாட்கள் முன்னர்
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In