புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 21 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
முதலாவதாக புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சராகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித்த ஹேரத்தும்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் – ஹர்ஷன நாணயக்காரவும் பதவியேற்றுக்கொண்டனர் அதேநேரம்
உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் அமைச்சராக சந்தன அபேரத்ன தெரிவானார்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியர்ரார்
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சராக – கே.டி. லால்காந்த வும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றார்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்ற அதே நேரம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் கடமைகளை பொறுப்பேற்றார்
அதேநேரம்
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே தெரிவுசெய்யப்பட்டார்
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றார்
பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சராக ஆனந்த விஜேபால பதவியேற்றார் அதேநேரம்
போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றார்
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் : Dr. நலிந்த ஜயதிஸ்ஸ கடமைகளை பொறுப்பேற்றார்
அதேநேரம்
புத்தசாசன, சமயவிவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனாவி பதவியேற்றார்
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பொறுப்பேற்றார்
வர்த்தக, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்
விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியல் அமைச்சராக பேராசிரியர் கிரிஷாந்த சில்வா தெரிவு செய்யப்பட்ட அதே நேரம் சக்தி வலு அமைச்சராக குமார ஜயகொடி பதவியேற்றார்
அதேநேரம்
சுற்றாடல் அமைச்சராக கலாநிதி தம்மிக பட்டபதி மற்றும் தொழில் அமைச்சராக – அனில் ஜயந்த ஃபெர்ணாண்டோவும் பதவியேற்றுக் கொண்டார்.











