இன்று (24) மாவீரரது பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று திருகோணமலை மாவட்டம் சம்பூரில் உள்ள கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் 500 மேற்பட்ட மாவீரர்களது பெற்றோர் மற்றும் உற்றார் கலந்து கொண்டனர். இதன் போது மாவீரரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தென்னம் பிள்ளைகளை திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் வழங்கி வைத்தார்.
இதனை அடுத்து ஏற்பாட்டுக் குழுவினரால் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது.











