இந்தியாவின் பாதுகாப்பு ஒதுக்கம் 50,000 கோடி இந்திய ரூபாய்களால் அதிகரிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, சிந்தூர் நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், பாதுகாப்பு ஒதுக்கத்தை இந்தளவுக்கு அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசேட குறைநிரப்பு பிரேரணை ஒன்றின் ஊடாக இந்த ஒதுக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில், இந்தியாவின் மொத்த பாதுகாப்பு ஒதுக்கம் 7 லட்சம் கோடி இந்திய ரூபாய்களை கடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன