EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என பேச்சுவார்த்தை!

வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என பேச்சுவார்த்தை!

ஆனி 10, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு முறைப்பாடுப்பெட்டி,கண்காணிப்பு கமரா என்பன பொருத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நலிவுற்ற சமுதாயத்தினரே கூடியளவு சமூகப் பிரச்சினைகளான பாலியல் துஸ்பிரயோகம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்களால் அதிகமாக பாதிப்படைகின்றனர்.

இதற்கு மேலதிகமாக குடும்பங்களின் வறுமையும், சமூகத்தில் ஏற்படும் கலாசார மாற்றம், தொலைப்பேசி பாவனை, சமூக வலைத்தள பாவனை போன்றவற்றினூடாக ஏற்படும் இடர்பாடுகளும் காரணமாக உள்ளன.

இவர்களுக்கான முறையான வழிகாட்டல்களுடன் சமூகப்பொறுப்புணர்வுடன் சகலரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களையும், முறைப்பாடுகளையும் கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

ஏனைய பாடசாலைகளிலும் இவை பொருத்தப்பட்டு முறைப்பாட்டுப் பெட்டியின் திறப்பு நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும்.

இரட்டை பிரஜாவுரிமையில் குழந்தை தத்தெடுப்பது தொடர்பான விடயங்களில் தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் கையாள்வதே பொருத்தமானதாக அமையும்.

சகல உத்தியோகத்தர்களும் கூட்டுப்பொறுப்புடனும் குழந்தைகளின் நலன்சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தும் செயற்பட வேண்டும்.

சிறுவர் இல்லங்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள சகல சிறுவர்களுக்கும் சிறுவர் சார்பான கடமை உத்தியோகத்தர்களின் விவரங்கள், தொலைப்பேசி இலக்கங்கள் என்பன தெரிவிக்கப்பட வேண்டும்.

சமூக கண்காணிப்பை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வுக் குழுக்கள் சமூக மட்டத்தில் உருவாக்கப்பட்டு நலன்சார் விடயங்கள் கவனிக்கப்படவேண்டும் எனவும், சகல விடயங்களையும் ஒருங்கிணைக்க பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

டுபாய் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து.
அண்மைய செய்திகள்

டுபாய் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து.

ஆனி 14, 2025
பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர்
அண்மைய செய்திகள்

பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர்

ஆனி 14, 2025
மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசம் காணப்படும் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
அண்மைய செய்திகள்

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசம் காணப்படும் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

ஆனி 14, 2025
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்
அண்மைய செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்

ஆனி 14, 2025
வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும்
அண்மைய செய்திகள்

வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும்

ஆனி 14, 2025
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.

ஆனி 14, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதிருப்தி

கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதிருப்தி

1 நாள் முன்னர்
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பஞ்ச ரத உற்சவம்!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பஞ்ச ரத உற்சவம்!

5 நாட்கள் முன்னர்
மலேசியாவில் பேருந்து விபத்தில் சிக்கி 15 மாணவர்கள் உயிரிழப்பு!

மலேசியாவில் பேருந்து விபத்தில் சிக்கி 15 மாணவர்கள் உயிரிழப்பு!

5 நாட்கள் முன்னர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை படுத்தப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை படுத்தப்பட்டுள்ளார்

4 நாட்கள் முன்னர்
சித்தர்களின் புனித பூமியில் குப்பை கொட்டுவது தொடர்பாக போராட்டம் முன்னெடுப்பு!

சித்தர்களின் புனித பூமியில் குப்பை கொட்டுவது தொடர்பாக போராட்டம் முன்னெடுப்பு!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In