ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்க செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அதிகவெப்பம் காரணமாக 845 பாடசாலைகள் அங்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெப்பத்தால் மக்கள் எளிதில் சோர்வடைவதுடன், நீர்ச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்படுகின்ற நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை ,வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளில் குளித்தபோது, பிரான்சில் 4 சிறுவர்கள் உள்பட ஐரோப்பாவில் பலர் நீரில் மூழ்கி உயிரி ழந்துள்ளனர்.
முதியவர்கள் மற்றும் பாதைகளில் வசிப்போரை பாதுகாக்க மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.











