EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டம் – ஜெர்மனி நிறுவனத்தை முதன்மைத் தேர்வாக முடிவு செய்தது கனேடிய மத்திய அரசு!

நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டம் – ஜெர்மனி நிறுவனத்தை முதன்மைத் தேர்வாக முடிவு செய்தது கனேடிய மத்திய அரசு!

ஆடி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டின் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ராணுவக் கொள்முதல் திட்டமாகப் பார்க்கப்படும் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்புச்சேவைக்கான கொள்முதல் தெரிவின் போது, மத்திய அரசு, ஜேர்மனி நாட்டின் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

கனடா தன்னிடம் உள்ள 4 பழைய விக்டோரியா-கிளாஸ் கப்பல்களை 2035-க்குள் முழுமையாக ஓய்வுபெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், தென்கொரியா தங்களால் அதிவேகமாக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து விநியோகிக்க முடியும் என்ற வாக்குறுதியை முன்வைத்திருந்தது.

இதனையடுத்து நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் பெறும் போட்டியில், தென்கொரியாவே இதுவரை முன்னணியில் இருந்து வந்தது. தென்கொரியாவின் உற்பத்தி வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஜெர்மனி மற்றும் நோர்வே நாடுகள் தங்களது சொந்த கடற்படைக்கான தயாரிப்பு வரிசையில், உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருந்த இடங்களை, கனடாவிற்காக மாற்றியமைத்து, கனடாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளன.

இதன்படி, 2036-ஆம் ஆண்டிற்குள் முதலாவது நவீன நீர்மூழ்கிக் கப்பலையும், 2040-க்குள் அடுத்த 4 கப்பல்களையும் தயாரித்து கனடாவிடம் ஒப்படைப்பதாக ஜெர்மனி வாக்குறுதி அளித்துள்ளது. அத்துடன், இந்த தயாரிப்பு ஒப்பந்தம் தங்களுக்குக் கிடைத்தால், கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 86 பில்லியன் டொலர் அளவுக்குப் பொருளாதார ஊக்கத்தையும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது.

மேலும், மானிட்டோபாவில் உள்ள ‘சர்ச்சில் துறைமுகத்தை’ (Port of Churchill) திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி மையமாக மாற்றவும், கனடாவில் விண்வெளி ஏவுதள வளாகம் (Space launch complex) மற்றும் அதிநவீன ஏவுகணை சோதனைத் தளங்களை அமைக்கவும் ஜெர்மனி முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், தமக்கான நீர்மூழ்கிகளைத் தயாரித்து அளிப்பதற்கான கொள்முதல் ஒப்பந்தத் தேர்வில், தென்கொரியாவின் ‘ஹன்வா ஓஷன்’ நிறுவனத்தை நிராகரித்துவிட்டு, ஜெர்மனியின் ‘திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ்’ (TKMS) நிறுவனத்தை மத்திய அரசு தனது முதன்மைத் தேர்வாக (Preferred bidder) முடிவு செய்துள்ளதாக நம்பகமான உத்தியோகபூர்வ ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ரோயல் கனேடிய கடற்படைக்காக (Royal Canadian Navy) 12 புதிய நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கும், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கான அதன் வாழ்நாள் பராமரிப்புச் செலவினங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நவீன நீர்மூழ்கிக்கப்பல்களைத் தயாரிக்கும் பாதுகாப்புத் திட்டத்தில் ஜெர்மனி மற்றும் நோர்வே நாட்டின் கூட்டுப் பங்களிப்புடன் வடிவமைக்கப்பட்ட ‘டைப் 212சிடி’ (Type 212CD) ரக நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது என, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இறுதி முடிவெடுத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) தலைவர்கள் உச்சிமாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன்னதாக, இம்மாபெரும் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்முதல் தீர்மானத்தை, அவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரியவருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
அண்மைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

ஆடி 7, 2026
மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்
அண்மைய செய்திகள்

மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்

ஆடி 7, 2026
சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்
அண்மைய செய்திகள்

சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

ஆடி 7, 2026
மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

ஆடி 7, 2026
வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்
அண்மைய செய்திகள்

வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

ஆடி 7, 2026
கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்
அண்மைய செய்திகள்

கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

போதிய ஆதாரங்கள் இன்றி வழங்கப்பட்ட 67 குடியுரிமைச் சான்றிதழ்களை அதிரடியாக இடைநிறுத்தியது குடிவரவுத் துறை!

போதிய ஆதாரங்கள் இன்றி வழங்கப்பட்ட 67 குடியுரிமைச் சான்றிதழ்களை அதிரடியாக இடைநிறுத்தியது குடிவரவுத் துறை!

4 நாட்கள் முன்னர்
யாழில்  காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

3 நாட்கள் முன்னர்
நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

1 நாள் முன்னர்
ரகித ராஜபக்ஷவுக்கு  மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

ரகித ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In