கியூபெக் மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மொன்றியல் ஒலிம்பிக் அரங்கின் (Montreal Olympic Stadium) உட்பகுதியை முழுமையாக நவீனமயமாக்குவதற்கான திட்டத்திற்கு, மாகாண அரசு உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
அரங்கின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் அமேலி டியொன் (Amélie Dionne) இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது இந்த அரங்கில் 870 மில்லியன் டொலர் செலவில் பாரிய கூரை மாற்றிமைக்கும் பணிகள் (Roof Replacement) ஏற்கனவே நடைபெற்று
வரும் நிலையில், அதற்கு இணையாக அரங்கின் உட்பகுதியையும் சர்வதேசத் தரத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் ஒட்டுமொத்தப் பணிகள் அனைத்தும் எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்து, அரங்கம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 56,000 இருக்கை வசதிகளைக் கொண்டுள்ள இந்த அரங்கின் பார்வையாளர் மாடங்கள் முழுமையாகப் புதுப்பிக்கப்படவுள்ளன.
வீரர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் நவீனமயமாக்கப்படுவதுடன், பொது கழிவறைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் (Concession stands) முற்றிலும் புதிய வசதிகளுடன் தரம் உயர்த்தப்படவுள்ளன. உட்புற நவீனமயமாக்கல் பணிகளுக்கான துல்லியமான இறுதிச் செலவு
விபரங்களை கியூபெக் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.











